Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

கோவிட் 19 விழிப்புணர்வு பிரச்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், இணைந்து குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணம் வாகன பிரச்சார நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் இ. ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இதில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் திரு. விஜயசந்திரன் , திருநெல்வேலி களவிளம்பர அலுவலர் திருமதி. ஜுனி ஜேக்கப் ,
கள விளம்பர உதவி அலுவலர் திரு. போஸ்வெல் ஆசிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…

கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.